கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம்? - மத்திய அரசு அதிர்ச்சி தகவல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 9, 2021

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம்? - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம்? - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்


கொரோனா தொற்றுக்கு ஆளான கர்ப்பிணி பெண்களுக்கு குறைப் பிரசவத்திற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக, நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மாநில அரசுகளின் முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளால், நாட்டில், கொரோனா பரவல் குறைந்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் கொரோனா நிலவரம் குறித்து, டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கேரளா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தான் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 90 மாவட்டங்களில் இருந்து 80 சதவீத கொரோனா பாதிப்புகள் பதிவாகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து, நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் கூறியதாவது:
கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தால் ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு குறைப் பிரசவத்திற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதனால் தான் கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம்.



No comments:

Post a Comment

Post Top Ad