ஸ்டாலின் எழுதிய குறிப்பு: என்ன எழுதியிருக்காருன்னு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க!
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. கடந்த மே மாதம் 7ஆம் தேதி முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். அன்று முதல் கொரோனா தடுப்பு பணிகளில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். கொரோனா தடுப்பு பணிகளில் அவர் எடுத்த நடவடிக்கை, அறிவித்த நலத்திட்டங்கள் என பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
அத்துடன், விமர்சனங்களை காது கொடுத்து கேட்கும் ஸ்டாலின், அதற்கான தீர்வை பெறுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இந்த நிலையில், தனது தந்தையும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூருக்கு ஸ்டாலின் சென்றுள்ளார்.
முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக ஸ்டாலின் திருவாரூர் சென்றுள்ளார். அம்மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். முன்னதாக, கருணாநிதியின் திருக்குவளை இல்லத்திற்குச் சென்று மரியாதை செலுத்திய அவர், அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில், தான் வகிப்பது பதவி அல்ல பொறுப்பு என்று குறிப்பெழுதினார்.
No comments:
Post a Comment