குறை தீர்ப்பு அதிகாரியை நியமித்தது ட்விட்டர் நிறுவனம்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 11, 2021

குறை தீர்ப்பு அதிகாரியை நியமித்தது ட்விட்டர் நிறுவனம்..!

குறை தீர்ப்பு அதிகாரியை நியமித்தது ட்விட்டர் நிறுவனம்..!


ட்விட்டர் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு குறை தீர்ப்பு அதிகாரியாக, வினய் பிரகாஷ் நியமிக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

'ட்விட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள், ஓ.டி.டி., எனப்படும், பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் நிறுவனங்களை கட்டுப்படுத்த, புதிய விதிமுறைகளை மத்திய அரசு நடைமுறைபடுத்தியது. இதன்படி, பயனாளர்களின் குறைகளை தீர்க்க, உள்நாட்டு குறை தீர்ப்பு அதிகாரி மற்றும் தனி அதிகாரம் பெற்ற தொடர்பு அதிகாரி ஆகியோரை முழு நேரமாக நியமிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த பதவிகளுக்கு ஆட்களை நியமிக்காமல், 'ட்விட்டர் இந்தியா' நிறுவனம் காலம் தாழ்த்தி வந்தது.

இந்நிலையில், ட்விட்டரில் வெளியான சில பதிவுகள் குறித்து புகார் அளிக்க விருப்பிய வழக்கறிஞர் ஒருவர், குறை தீர்ப்பு அதிகாரி நியமிக்கப்படாததை அறிந்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ட்விட்டர் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தது.
ட்விட்டர் நிறுவனம் பதிலளிக்காததை அடுத்து, சட்டப் பாதுகாப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், புதிய ஐ.டி., விதிமுறைகளின்படி, இந்தியாவிற்கான குறை தீர்ப்பு அதிகாரியாக, நமது நாட்டை சேர்ந்த வினய் பிரகாஷ் நியமிக்கப்பட்டு உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், அவரது மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad