ரயில்வே தேர்வு, இது நியாயமே இல்ல; அமைச்சருக்கு வைகோ பலமான கோரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

ரயில்வே தேர்வு, இது நியாயமே இல்ல; அமைச்சருக்கு வைகோ பலமான கோரிக்கை!

ரயில்வே தேர்வு, இது நியாயமே இல்ல; அமைச்சருக்கு வைகோ பலமான கோரிக்கை!


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் இரு அவைகளையும் முடக்கும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சந்தித்து பேசினார். அப்போது, திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ரயில்வே பணியாளர் தேர்வு

இதுதொடர்பாக மதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரயில்வே பணி இடங்களுக்கான தேர்வுகளை ஜூலை 23 முதல் 31 வரை நடத்துவதாக திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதில் தமிழகத்தின் மதுரை கோட்டமும் அடங்கும். இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர்,

நெருக்கடி கொடுக்கும் கொரோனா

திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் மதுரைக் கோட்டத்திற்குள் ஒரு மையம் கூட இல்லை. எனவே தேர்வுகளை எழுதுவற்காக கேரளாவிற்கு சென்று, ஒரு வாரம் வரையிலும், விடுதிகளில் தமிழக இளைஞர்கள் தங்கி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் கேரளாவில் கொரோனா தொற்று கடுமையாகத் தாக்கிக் கொண்டு இருக்கிறது.

தமிழக இளைஞர்களுக்கு சம வாய்ப்பு

இது தமிழக இளைஞர்களுக்கான வாய்ப்புகளை மறுப்பதாக இருக்கின்றது. ரயில்வே அதிகாரிகளின் இத்தகைய போக்கிற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவிப்பதுடன், தாங்கள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, அந்தக் கோட்டத்தில் உள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைத்திட ஆவன செய்திட வேண்டும். முதல் கட்டமாக நாளை தொடங்க இருக்கின்ற இந்தத் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்.

அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் சமூக இடைவெளியுடன், கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி போதுமான தேர்வு மையங்கள் அமைத்து படித்து வேலை இல்லாமல் இருக்கிற தமிழ்நாட்டின் தகுதியுள்ள அனைத்து இளைஞர்களுக்கும் சம நீதி கிடைத்திட ஆவன செய்ய வேண்டுமாறு மத்திய அமைச்சரிடம் வைகோ வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad