ஜெய் தமிழ்நாடு: ஆளுநர் பன்வாரிலால் பேச்சு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 12, 2021

ஜெய் தமிழ்நாடு: ஆளுநர் பன்வாரிலால் பேச்சு!

ஜெய் தமிழ்நாடு: ஆளுநர் பன்வாரிலால் பேச்சு!



கொங்கு மண்டலம் என்று குறிப்பிடப்படும் மேற்கு மண்டலம் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துவருகிறது. இங்கு அதிமுக பலம் வாய்ந்ததாக உள்ளது. மேற்கு மண்டலத்தில் தன் செல்வாக்கை அதிகரிப்பதற்கான முயற்சிகளை திமுக மேற்கொண்டு வருகிறது. கோவையில் பாஜகவுக்கு கனிசமான வாக்கு வங்கியும் உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தைத் தனியாகப் பிரித்து அதை ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கு மத்திய அரசிடம் திட்டம் இருப்பதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. ஒன்றிய அரசு என்று திமுக கூறிவருவதன் தொடர்ச்சியாக அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொங்கு நாடு விவகாரத்தை பாஜக கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என்கிற குரல் அவ்வப்போது எழுப்படும். ஆனால், அது மக்களின் குரலாக இருக்காது. சில அரசியல் தலைவர்களின் குரலாகவே அது எப்போதும் இருந்திருக்கிறது. தற்போது, கொங்குநாடு பிரிவினைக்கு திமுக, அதிமுக, மதிமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டை யாராலும் பிரிக்க முடியாது, மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று திமுக எம்பி கனிமொழியும் நேற்று வாக்குறுதி கொடுத்து இருந்தார். வெகு சிலரை தவிர தமிழநாட்டு மக்களும் இந்த பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



ஆனால், கொங்கு நாடு பிரிப்பு என்ற கருத்துக்கு ஆதரவாக பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். கோவை வடக்கு மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்தில் கொங்குநாடு புதிய மாநிலமாக உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் திடீரென கொங்கு நாடு சர்ச்சையை பாஜகவினர் கிளப்பி இருப்பதற்கிடையே, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஜெய் தமிழ்நாடு என்று பேசிய சம்பவம் வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் அருகே தண்டலம் கிராமத்தில் அரசு மருத்துவமனை ஒன்றை திறந்து வைக்கும் விழாவில்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். கட்டுப்பாடுகளை பின்பற்றி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க அரசுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து உரையை முடித்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நன்றி வணக்கம்.. ஜெய் ஹிந்த்,.. ஜெய் தமிழ்நாடு என்றார். தொடர்ந்து, அங்கிருந்த மக்கள் ஆரவாரமாக கைதட்டினர். தமிழ்நாடு என்று ஆளுநர் சொன்னதும், கொங்குநாடு சர்ச்சைக்கு இடையில் பேசிய ஆளுநரின் இந்த பேச்சு வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad