இந்திய அரசின் சொத்தை முடக்கிய வெளிநாட்டு நிறுவனம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 9, 2021

இந்திய அரசின் சொத்தை முடக்கிய வெளிநாட்டு நிறுவனம்!

இந்திய அரசின் சொத்தை முடக்கிய வெளிநாட்டு நிறுவனம்!


வரியை தவறாக பயன்படுத்திய புகார் தொடர்பாக பிரிட்டனைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம், இந்திய அரசுக்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் கடந்த 2020ஆம் ஆண்டு தீர்பளித்த தீர்பாயம், 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்துக்கு செலுத்த இந்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இதனிடையே, 2020ம் ஆண்டு இறுதி வரைக்குமான கணக்கீட்டின் படி, வட்டித் தொகையையும் சேர்த்து மொத்தம் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை இந்திய அரசு தர வேண்டும் என்று தெரிவித்துள்ள கெய்ர்ன் நிறுவனம், தொகையை திருப்பி வழங்காத பட்சத்தில் வெளிநாடுகளில் இருக்கும் இந்திய அரசாங்கத்துக்கான சொத்துக்களை பறிமுதல் செய்வோம் என்று கூறி, 70 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துகள் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.



இந்த நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள இந்திய அரசுக்கு சொந்தமான 20 சொத்துக்களை முடக்குவதற்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் மதிப்பு 20 மில்லியன் யூரோக்கள் எனவும் தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் 11ஆம் தேதி கெய்ர்ன் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், இந்த உத்தரவை வழங்கியதாகவும், அன்று மாலையே அதற்கான சட்ட நடவடிக்கைகள் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவு நகல் இன்னும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad