காலில் வீட்டை உடைத்தும், திருநங்கைகள் வேடமிட்டும் மதுரையில் திருடி வந்தவர்கள் கைது!
மதுரை மாநகரில் செல்லூர்,தல்லாகுளம், திருப்பாலை,டிவிஎஸ் நகர், தெப்பக்குளம், விளக்குத்தூண், தெற்குவாசல் கூடல்புதூர் மற்றும் புதூர் ஆகிய பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை ஒரு கும்பல் நோட்டமிட்டு வந்துள்ளது.
தொடர்ந்து அந்த வீடுகளை பகல்நேரங்களில் உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது. இதுத் தொடர்பாக காவல்துறையினருக்கு வந்த புகாரையடுத்து அந்தந்த காவல்நிலையங்களில் வழக்குபதிவு செய்யப்பட்டது.
விசாரணை அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்ற மாரியப்பன் என்பவரை கைது செய்த தனிப்படையினர் அவரிடம் நடத்திய விசராணை நடத்தினர். அதில் கார்த்திக் சென்னையிலிருந்து பேருந்தில் மதுரைக்கு வந்து எதவாது ஒரு பகுதிக்கு பகலில் நடந்துசென்று பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளை அடித்தது தெரியவந்தது.
இதற்கிடையே இந்த திருடர் கொள்ளை சம்பவத்தின்போது தனது கைரேகை பதிந்துவிடக்கூடாது என்பதற்காக தனது கால்களை மட்டுமே பயன்படுத்தி பூட்டை உடைத்து வீடுகளில் உள்ள பணம் நகைகளை சுருட்டி சென்றது தெரியவந்துள்ளது.
இதேபோல் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் மற்றும் காமராஜபுரத்தை சேர்ந்த அருண்குமார் ஆகிய இருவரும் திருநங்கைகள் போல் வேடமிட்டு இரவு நேரத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மதுரை மாநகரில் நடைபெற்ற 22திருட்டு வழக்குகளில் தொடர்புடைய மூவரிடமும் இருந்து சுமார் 53 லட்சம் மதிப்புள்ள 143 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிபொருட்கள் மீட்கப்பட்டது. குற்றவாளிகள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment