குடிமகன்கள் செம ஷாக்; டாஸ்மாக் கடைகளுக்கு முக்கிய எச்சரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

குடிமகன்கள் செம ஷாக்; டாஸ்மாக் கடைகளுக்கு முக்கிய எச்சரிக்கை!

குடிமகன்கள் செம ஷாக்; டாஸ்மாக் கடைகளுக்கு முக்கிய எச்சரிக்கை!

தமிழகத்தில் டாஸ்மாக் என்ற பெயரில் மதுபான வகைகளின் சில்லறை விற்பனையை மாநில அரசு நடத்தி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள், தளர்வுகள் அமலானதை ஒட்டி மீண்டும் திறக்கப்பட்டன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் மதுபான விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இந்த சூழலில் சில டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பழைய மதுபான வகைகள்

இது மது பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தவே டாஸ்மாக் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகத்தின் ஆலோசனை கூட்டம் மேலாண்மை இயக்குநர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. அதில், மதுபான கிடங்குகள் மற்றும் டாஸ்மாக் கடைகளில் 90 நாட்களை கடந்த மதுவகைகள் இருக்கக் கூடாது.

மாவட்ட மேலாளர்கள் ஆய்வு

இவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக விற்றுவிட வேண்டும். மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் வருகின்றன. இதுதொடர்பாக மாவட்ட மேலாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மதுக்கடைகளை திறப்பதற்கு முன்பாக சென்று கடைகள் திறந்தவுடன் மேற்பார்வையாளர் உட்பட யார், யார் அங்கிருக்கிறார்கள்

தொழிற்சங்கங்கள் உடன் பேச்சுவார்த்தை

என்பதை செல்போனில் படம்பிடித்து தலைமை அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு மாவட்ட மேலாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும். வெளிநபர்கள் கடைகளுக்குள் இருக்கக் கூடாது. மேலாண்மை இயக்குநர் அனுமதியின்றி யாருக்கும் இடமாறுதல் உத்தரவு வழங்கக் கூடாது. பணியாளர்கள் நலன் தொடர்பாக அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச வேண்டும்.

மாவட்ட மேலாளர்களால் செய்ய முடியாத கோரிக்கைகளை தொழிற்சங்கங்களுடன் முதுநிலை மண்டல மேலாளர்கள் பேசி நடவடிக்கை எடுக்கலாம். அவர்களாலும் தீர்வு காண முடியவில்லை எனில் மேலாண்மை இயக்குநரின் கவனத்திற்கு கொண்டு வரலாம் என்று அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment

Post Top Ad