மின் மயானத்தை வைத்து மனிதர்களைக் கொத்தடிமைகளாக மாற்ற விருதுநகரில் முயற்சி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 8, 2021

மின் மயானத்தை வைத்து மனிதர்களைக் கொத்தடிமைகளாக மாற்ற விருதுநகரில் முயற்சி!

மின் மயானத்தை வைத்து மனிதர்களைக் கொத்தடிமைகளாக மாற்ற விருதுநகரில் முயற்சி!



விருதுநகர் நகராட்சி மின்மயான ஊழியர்கள் விருதுநகர் நகராட்சி அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிட்டு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
விருதுநகர் நகராட்சி மின் மயானத்தில் சடலங்களை எரியூட்டும் பணியை ஷெல் அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு முன்பாக அப்பணியைச் சக்தி பவுண்டேசன் நடத்தி வந்தது. அப்போது பணிபுரிந்த ஊழியர் மகாலிங்கம் என்பவர் பணியை முறையாக மேற்கொள்ளாமல் அதிகப் பணம் பெற்றுக் கொண்டு அவருக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பாதிக்கும் கீழ் ஊதியம் வழங்கி வந்துள்ளார்.

இது குறித்து பணிபுரிபவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஷெல் அறக்கட்டளை மகாலிங்கத்தை பணிநீக்கம் செய்தது. அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் ஆவார். இதனால் அக்கட்சி நிர்வாகிகளைக் கொண்டு பொய்யான குற்றச்சாட்டை ஷெல் அறக்கட்டளை மீது கூறி அப்பணியைக் கைப்பற்றி மீண்டும் வேறு அறக்கட்டளைக்கு மாற்ற மகாலிங்கம் முயன்று வருகின்றா

மீண்டும் மகாலிங்கம் கையில் சென்றால் தங்களுக்கு உரிய ஊதியம் கிடைக்காது எனவே தங்கள் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் எனவே இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad