தமிழகத்தில் ரயில் சேவை திடீர் ரத்து; பயணிகள் பெரும் சோகம்!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் தீவு வரையிலான கடற்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டது. 107 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்தில் பொறியியல் வேலைகள் நடைபெறவுள்ளதாக மதுரை ரயில்வே மண்டலம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ராமேஸ்வரத்திற்கு செல்லும் மற்றும் புறப்படும் 16 ரயில்கள் வரும் செப்டம்பர் மாதம் வரை பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், பாலத்தில் எந்தவொரு தீவிர பாதிப்பும் இல்லை. சீரமைப்பு பணிகள் முடிவடைந்து வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.
ரயில் சேவையில் மாற்றம்
* ரயில் எண் 02205 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் ஜூலை 14 முதல் செப்டம்பர் 13 வரையும், ரயில் எண் 02206 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் ரயில் ஜூலை 15 முதல் செப்டம்பர் 14 வரையும் மண்டபத்திற்கு வந்து சேரும். அங்கிருந்து மட்டும் புறப்படும்.
* ரயில் எண் 06851 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் ரயில் ஜூலை 14 முதல் செப்டம்பர் 13 வரையும், ரயில் எண் 06852 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் ரயில் ஜூலை 15 முதல் செப்டம்பர் 14 வரை மண்டபத்திற்கு வந்து சேரும். அங்கிருந்து மட்டும் புறப்படும்.
No comments:
Post a Comment