ஜார்க்கண்ட் நீதிபதி கொலையை சுப்ரிம் கோர்ட் விசாரிக்க வேண்டும்: விழுப்புரம் வழக்கறிஞர்கள் போராட்டம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 30, 2021

ஜார்க்கண்ட் நீதிபதி கொலையை சுப்ரிம் கோர்ட் விசாரிக்க வேண்டும்: விழுப்புரம் வழக்கறிஞர்கள் போராட்டம்!

ஜார்க்கண்ட் நீதிபதி கொலையை சுப்ரிம் கோர்ட் விசாரிக்க வேண்டும்: விழுப்புரம் வழக்கறிஞர்கள் போராட்டம்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் நீதிபதி உத்தம் ஆனந்த் நேற்று கொல்லப்பட்டார். இச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட செஞ்சி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும். திட்டமிட்டு நடைபெற்ற நீதிபதி கொலைக்கு மத்திய அரசு உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதினை வலியுறுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை உடற்பயிற்சி(ஜாக்கிங்) மேற்கொள்ளும் போது நீதிபதி உத்தம் ஆனந்த் மீது ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகள் வெளியானதை அடுத்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad