ஸ்மார்ட் சிட்டி திட்டம்னு பேரு, ஓரு மணி நேர மழைக்கே தூத்துக்குடி மக்கள் கடும் அவதி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 4, 2021

ஸ்மார்ட் சிட்டி திட்டம்னு பேரு, ஓரு மணி நேர மழைக்கே தூத்துக்குடி மக்கள் கடும் அவதி!

ஸ்மார்ட் சிட்டி திட்டம்னு பேரு, ஓரு மணி நேர மழைக்கே தூத்துக்குடி மக்கள் கடும் அவதி!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று மாலை 3 மணியளவில் ஒரு மணி நேரமாக இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


சுமார் ஒரு மணி நேரமாக வெளுத்து வாங்கிய கன மழையால் சாலைகளில் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனம் தெரியாத சூழல் உருவானது. திடீரென பெய்த மழையால் மக்களின் பணிகள் முடங்கியது.

சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி சென்றன. ஆங்காங்கே சாலைகளில் குழிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காகத் தோண்டப்பட்டிருந்ததால் அவற்றில் நீர் தேங்கி நின்றது.

இதன் காரணமாகப் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் அவதிப்பட்டனர். சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகள் மெதுவாக ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் உருவானது.

No comments:

Post a Comment

Post Top Ad