இயல்பு நிலைக்கு திரும்பிய தமிழ்நாடு: இதற்கெல்லாம் எப்போது அனுமதி?
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரம் என்ற அளவிலிருந்து 4ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகிவருகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று காலை முதல் தமிழ்நாட்டில் பெரும்பாலான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் ஜூலை 5 முதல் 12ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
என்னென்ன தளர்வுகள்?
தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் இம்முறை அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மாவட்டத்துக்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும் பேருந்து போக்குவரத்து அனைத்து ஊர்களிலும் தொடங்கப்பட்டுள்ளன. கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குளிர் சாதன வசதி இல்லாமல், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment