நாடாளுமன்றத்தில் சம்பவம்.. டார்கெட் ஃபிக்ஸ் செய்த விவசாயிகள்!
ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு முதல் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால், வேளாண் சட்டங்களை அரசு ரத்து செய்யவும் இல்லை; விவசாயிகள் போராட்டத்தை கைவிடவும் இல்லை.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது தினசரி நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தப்போவதாக சம்யுக்த் கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது. 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புதான் சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நாடாளுமன்றத்திற்குள் வேளாண் சட்டங்களை எதிர்த்து குரல் கொடுக்கும்படி அனைத்து எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கும் கடிதம் வழங்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment