கடவுள் தான் சார் வந்தார்: கொரோனா விதைத்த மனிதநேயம்!
கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா நம்மை பாடாய்ப்படுத்திக் கொண்டுள்ளது. அதிலிருந்து மீண்டவர்கள் ஏராளம். பலியானவர்களும் அதிகம். மரண வாயிலை எட்டிப் பார்த்து வந்தவர்களும் ஏராளம். கொரோனா நம்மிடம் இருந்து எடுத்துச் சென்றது ஏராளம். ஆனாலும், கொரோனா நமக்கு பலவிதமான படிப்பினைகளையும், மனித நேயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கொரோனா தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பெண் ஒருவர், தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பேசும் பெண், “எனக்கு கொரோனா வந்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தேன். திடீரென உடம்பு முடியாமல் போனது. ஆக்சிஜன் அளவும் குறைந்து விட்டது. மருத்துவமனைக்கு செல்லலாம் என்று கேப் புக் செய்த போது கொரோனா என்பதால் யாருமே வரவில்லை. கடைசியா ஒரே ஒருத்தர் மட்டும் நான் கண்டிப்பாக வருகிறேன் அம்மா என கூறி வந்தார். ஒவ்வொரு மருத்துவமனையாக இறங்கிச் சென்று படுக்கை இருப்பு பற்றி கேட்டறிந்தார். எங்குமே இடம் கிடைக்கவில்லை.
No comments:
Post a Comment