கருத்து சுதந்திரத்தை பாரபட்சமின்றி வழங்குக! தமிழக அரசுக்கு இ.பி.எஸ்., கண்டனம்!
பொய் வழக்கு தொடர்வதில் நாட்டம் செலுத்தி வரும் தி.மு.க., அரசு , மக்கள் விரோதப் போக்கை , ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், நடுநிலையாக இருந்து செயலாற்றுவோம் என்றார்.
தி.மு.க., அரசு தனது தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நிறைவேற்றுவோம், முதல் கையெழுத்திடுவோம் என்று கூறிய பல முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதையும், தி.மு.க., அரசு மற்றும் அமைச்சர்களாக உள்ள அவர்களின் செயல்பாடுகளை, நியாயமான முறையில் சமூக வலைதளங்களுக்கு ஊழியர் கருத்து சுதந்திரத்தின் படி மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகளை, காவல் துறையை வைத்து இந்த அரசு தரக்குறைவாக விமர்சிப்பதாக கூறி வழக்கு பதிவு செய்கிறார்கள்.
No comments:
Post a Comment