சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் செம்ம மழை: வானிலை மையம் முக்கிய தகவல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 16, 2021

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் செம்ம மழை: வானிலை மையம் முக்கிய தகவல்

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் செம்ம மழை: வானிலை மையம் முக்கிய தகவல்



சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழை அடுத்த 30 நிமிடங்கள் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் ஜூலை 18ம் தேதி வரை அடுத்த மூன்று நாளைக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மேலும், இன்றையும் நாளையும் நீலகிரி, கோவை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த ஒரு மணி நேரமாக பல இடங்களில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது.

சென்னை புறநகர் பகுதிகளான வண்டலூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், கேளம்பாக்கம், படூர், புதுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது.முன்னதாக தேனி, சேலம், நாமக்கல், தருமபுரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த மூன்று நாளைக்கு கனமழையும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் மழை அடுத்த 30 நிமிடங்கள் நீடிக்கும் என்றும் கூறியுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad