சைபர் க்ரைம் அதிகமாகிவிட்டது, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள் - முதல்வர் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 29, 2021

சைபர் க்ரைம் அதிகமாகிவிட்டது, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள் - முதல்வர்

சைபர் க்ரைம் அதிகமாகிவிட்டது, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள் - முதல்வர்

மற்ற குற்றங்களை விட தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று உரையாற்றினார். அப்போது பேசியவர், சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருந்தால் அந்த நாடு சிறப்பாக இருக்கும்.
உங்கள் திறமைகளை மக்களுக்கு பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும்.மற்ற குற்றங்களை விட தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. நவீன வழிமுறைகளை கண்டறிந்து சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும்.

காவல்துறையின் விருப்பங்களை திமுக நிறைவேற்றும் என்று கூறிய முதல்வர் புதிதாக பொறுப்பேற்கும் காவலர்கள் டிஜிபி சைலேந்திர பாபுவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசியவர், லுங்கி அணிந்து, கழுத்தில் கர்ச்சீப் கட்டியோர்தான் முன்பெல்லாம் வழிப்பறி செய்வர், தொழில்நுட்ப சேவை பெருகியதால் அடையாளம் தெரியாத வகையில் குற்றவாளிகள் மாறியுள்ளனர்.



அமெரிக்கா, இங்கிலாந்து போல் காவல்துறையில் நவீன தொழில்நுட்பத்தை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு சான்றிதழிழ், பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Top Ad