தமிழகத்தில் அமலாகிறது கடும் ஊரடங்கு? - முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 29, 2021

தமிழகத்தில் அமலாகிறது கடும் ஊரடங்கு? - முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

தமிழகத்தில் அமலாகிறது கடும் ஊரடங்கு? - முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

தமிழகத்தில், தளர்வுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கை மேலும் நீட்டிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.


தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. மாநில அரசின் முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளால், 35 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு, தற்போது 2 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அளித்துள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் மேலும் பல தளர்வுகள் அளிப்பது தொடர்பாக, தி.மு.க., தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தக் கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழக அரசின் மூத்த உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளார். சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஊரடங்கு தளர்வுகளில், 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad