குழந்தைகள் முன் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்..!
தவிர்க்க வேண்டியவை:
- குழந்தைகள் அனைவருமே நிறைய தவறுகள் செய்வது வழக்கம். பெற்றோர்கள் ஆகிய நாம்தான் குழந்தை செய்யும் தவறினை மாற்ற வேண்டும். குழந்தை செய்யும் தவறினை கண்டிக்காமல் விடக்கூடாது.
- குழந்தையின் முன்பு நின்று பெற்றோர்கள் சண்டை போடுவதை தவிர்த்துக்கொள்ளவும்.
- பெரியவர்களை குழந்தைகள் அடிக்கும் போது திருத்த வேண்டும். குழந்தையை திருத்தாவிட்டால் பெரியவர்கள் ஆனதும் திருத்தவே முடியாமல் போகும்.
- குழந்தையை பெற்றோர்கள் மிரட்டும் போது கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன் போன்ற சொற்களை உபயோகப்படுத்தி குழந்தையை திட்டாதீர்கள்.
- தங்கள் குழந்தைக்கு முன்பு வேறு ஒரு குழந்தையை ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்கவும். அதுபோல், மற்றொரு குழந்தையை ஒப்பிட்டு தன் குழந்தையை தாழ்த்தி மற்றவர்களிடம் பேச கூடாது.
- ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ தெரிந்த நபரிடமோ அதிகம் பழக்கமில்லாத நபரிடமோ செல்வதற்கு விருப்பம் இல்லாமல் இருந்தால் கட்டாயப்படுத்தி குழந்தையை அவர்களிடம் விடாதீர்கள்.
- குழந்தை முன்பு தீய சொற்கள் பேசுவதை தவிர்க்கவும். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.
- குழந்தைகள் எதிலும் தோல்வியை சந்தித்தால் அவர்களை திட்டவோ, அடிக்கவோ செய்யாதீர்கள்.
- குழந்தைகளை யாருடனும் சேராதே வீட்டிலே இரு என்று அவர்களை அடைத்து வைக்காதீர்கள்.
- குழந்தையினை எப்போதும் படி படி என்று தொந்தரவு செய்யாதீர்கள்.
- குழந்தை மிகவும் அடம் பிடிக்கிறது என்று அவர்கள் கேட்டும் அனைத்து பொருளையும் வாங்கி கொடுக்காதீர்கள்.
- குழந்தையின் முன்பு தாய், தந்தையர் பாலியல் ரீதியான சீண்டல்களை செய்யக்கூடாது.
- குழந்தைகளை எப்போதும் தனிமையில் இருக்க விடக்கூடாது.
- குழந்தையின் முன்பு அப்பாக்கள் புகை பிடிப்பது, மது அருந்துதல் போன்றவைகளை செய்ய கூடாது.
- குழந்தைகள் முன்பு மற்றவர்களை புறம் பேசுதல் கூடாது.
No comments:
Post a Comment