தடுப்பூசி வேஸ்ட் பத்தி நீங்க பேசலாமா சார், மேடம்? -இபிஎஸ், குஷ்புவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் மா.சு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 18, 2021

தடுப்பூசி வேஸ்ட் பத்தி நீங்க பேசலாமா சார், மேடம்? -இபிஎஸ், குஷ்புவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் மா.சு!

தடுப்பூசி வேஸ்ட் பத்தி நீங்க பேசலாமா சார், மேடம்? -இபிஎஸ், குஷ்புவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் மா.சு!

சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள தனியார் பள்ளியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவங்கி வைத்தார்.

இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது:

தமிழகத்தில் ஜூன் மாதத்தில் 5 லட்சம் தடுப்பூசி வீணாகி உள்ளது என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜகவின் நடிகை குஷ்பு தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் 4 லட்சம் தடுப்பூசிகள் வீணாகி உள்ளது அதனை திமுக ஆட்சியில் சமன் செய்தது மட்டுமில்லாமல் கூடுதலாக 3 லட்சம் தடுப்பு ஊசிகள் கூடுதலாக செலுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து தேவைப்பட்டால் வெள்ளை அறிக்கை வெளியிட தயாராக உள்ளோம்.

தமிழகத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி தட்டுப்பாடு களையப்பட்டு தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, " தமிழகத்தில் குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க மாவட்டங்களில் சிகிச்சை மையங்கள் உருவாகி உள்ளன. தற்போது வரை 10 ஆயிரம் படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் தயாராக உள்ளன.

குழந்தைகளுக்கு நிமோ காய்ச்சல் தடுப்பூசி செலுத்தம் பணி 21 மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால் அதிமுக ஆட்சியில் இந்த ஊசி செலுத்தும் பணி துவங்கவே இல்லை. தனியார் மருத்துவமனையில் இந்த ஊசியின் விலை 4000 ரூபாய் என 3 முறை செலுத்த வேண்டும் என்றால் 12 ஆயிரம் ரூபாய் தேவை.

இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 5 வயதிற்கு கீழ் உள்ள 9 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகள் அனைவருக்கும் மத்திய இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் நிமோ ஊசி விரைவில் செலுத்தப்படும். என்று தெரிவித்தார். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு வழங்கப்பட்ட பயிற்சி நடைமுறை தொடரும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad