"இவங்க ரெண்டு பேரு எப்பவுமே ஆப்சென்ட் தான்!" - திருச்சி சிவா குற்றச்சாட்டு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

"இவங்க ரெண்டு பேரு எப்பவுமே ஆப்சென்ட் தான்!" - திருச்சி சிவா குற்றச்சாட்டு

"இவங்க ரெண்டு பேரு எப்பவுமே ஆப்சென்ட் தான்!" - திருச்சி சிவா குற்றச்சாட்டு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
இதனால் அவைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும், பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதனால் இரு அவைகளும் முடங்கின.

இது குறித்து, டெல்லியில் மாநிலங்களவை தி.மு.க., குழுத் தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இந்தியாவில் பொருளாதாரம் சிதைந்துள்ளதால், நாடு மிகப்பெரிய சோதனை கட்டத்தை சந்தித்து வருகிறது. நாடாளுமன்ற நெறிமுறைகளை கடைபிடிப்பதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில், பிரச்னைகள் குறித்து அனைவரும் விவாதித்து தீர்வு காண்பதே வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போதைய அரசு தனது தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்து கொள்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பொருளாதார பின்னடைவு மற்றும் பெகாசஸ் தொடர்பாக விவாதிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் தான் எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் கடமையாற்ற விரும்புகிறது. பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் பொறுப்பில் உள்ளவர்கள் பதில் அளிக்க வேண்டும். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்டோர் அவைக்கே வருவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad