திடீரென அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் முழு ஊரடங்கு - முடிவை மாற்றிய அரசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 10, 2021

திடீரென அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் முழு ஊரடங்கு - முடிவை மாற்றிய அரசு!

திடீரென அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் முழு ஊரடங்கு - முடிவை மாற்றிய அரசு!



கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. கடந்த சில நாள்களாக பாதிப்பு வெகுவாக குறைந்தது மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்தது.

இந்த சூழலில் கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

இதனால் கேரளாவில் இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

*தனியார் போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

*மதுக்கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் இயங்காது.

*மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பாதிப்பு சற்று எட்டிப்பார்க்கும் நிலையில் தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad