மீண்டும் சேலத்தில் தலைதூக்கப் போகும் கொரோனா பெருந்தொற்று: மக்களே உஷார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 11, 2021

மீண்டும் சேலத்தில் தலைதூக்கப் போகும் கொரோனா பெருந்தொற்று: மக்களே உஷார்!

மீண்டும் சேலத்தில் தலைதூக்கப் போகும் கொரோனா பெருந்தொற்று: மக்களே உஷார்!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நோய்ப் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மெல்லத் திரும்பத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில்
சேலம் சூரமங்கலம் மீன் மார்க்கெட்டில் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு மீன் வாங்குவதற்காகத் திரளான பொதுமக்கள் குவிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீன்களின் விலையில் மாற்றம் இல்லை என்றாலும், மீன் பிரியர்கள் தங்களுக்கு விருப்பமான மீன் வகைகளை வாங்கி செல்கின்றனர். இருப்பினும் வழக்கமான வியாபாரம் இல்லை என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.இதற்கிடையே மீன்களை வாங்க ஆர்வத்துடன் குவிந்த பொதுமக்கள் தனிமனித இடைவெளியை மறந்து கூட்டம் கூட்டமாக மீன் மார்க்கெட்டில் அலைமோதியதால் மீண்டும் தொற்று நோய் பரவும் அபாயம் சேலம் மாவட்டத்தில் உருவாகியுள்ளது.



இதனைக் கட்டுப்படுத்த மார்க்கெட் நிர்வாகிகளோ, மாநகராட்சி ஊழியர்களோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகப் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad