எச்சில் தொட்டு டிக்கெட் வழங்கிய கண்டக்டர்: பயணிகள் அதிர்ச்சி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 16, 2021

எச்சில் தொட்டு டிக்கெட் வழங்கிய கண்டக்டர்: பயணிகள் அதிர்ச்சி!

எச்சில் தொட்டு டிக்கெட் வழங்கிய கண்டக்டர்: பயணிகள் அதிர்ச்சி!


கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதையடுத்து, மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோவையில் இருந்து திருப்பூருக்கு வந்த அரசு பேருந்தின் நடத்துனர் குணசேகரன் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும் போது, எச்சில் தொட்டு பயணச்சீட்டை கிழித்து வழங்கியுள்ளார்.
கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாக எச்சில் விளங்கும் நிலையில், நடத்துனரின் செயலை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அதனை கண்டுகொள்ளாத அரசு பேருந்து நடத்துனர், எச்சிலை தொட்டே மீண்டும் டிக்கெட்டுகளை வழங்கி வந்ததாக தெரிகிறது.

இதனிடையே, பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் இதுகுறித்து திருப்பூர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின்பேரில் பேருந்து திருப்பூர் வருவதற்கு முன்பே கொரோனா பரிசோதனை செய்யும் நபர்களுடன் அதிகாரிகள் தயார் நிலையில் இருந்துள்ளனர்.

அந்த அரசு பேருந்தானது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததும், உடனடியாக பேருந்தின் நடத்துனர் கீழே இறக்கப்பட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலக பேருந்து நிழற்குடையில் வைத்தே அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவரின் பரிசோதனை முடிவுகள் வெளிவரும் வரையில், பணியை தொடர அவருக்கு அனுமதி கிடையாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொரோனா காலகட்டத்தில் இதுபோன்ற செயல்களில் பேருந்து நடத்துனர்கள் ஈடுபடக் கூடாது, பொறுப்பை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad