பள்ளிகள் திறப்பும், ஆன்லைன் கல்வியும்; சர்ப்ரைஸ் கொடுக்குமா தமிழக அரசு?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 2021-22ஆம் கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை பெரிதும் ஓய்ந்திருக்கிறது. இதையொட்டி விரைவில் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதற்கிடையில் வரும் மார்ச் 2022ல் பொதுத்தேர்வு எழுதவுள்ள 12ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
முக்கியமில்லாத பாடங்கள் நீக்கம்
அதாவது, ஆன்லைன் வாயிலாக கற்று தெளிவதில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன. எனவே 12ஆம் வகுப்பிற்கான கற்றல் பாதிக்காத வகையில் முக்கியத்துவம் இல்லாத பாடங்களை நடப்பாண்டிற்கான பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் நுழைவுத்தேர்வுகளுக்கு சம்பந்தமில்லாத பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை நீக்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும்.
No comments:
Post a Comment