தேனி-கேரளா எல்லையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் திடீர் ஆய்வு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

தேனி-கேரளா எல்லையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் திடீர் ஆய்வு!

தேனி-கேரளா எல்லையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் திடீர் ஆய்வு!

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அரக்கோணம் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த மூன்று நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
புயல் பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பேரிடர் மீட்பு படை அதிகாரி கணேஷ் பிரசாத் தலைமையில் பேரிடர் மீட்பு குழுவினர், மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் துறை, தீயணைப்பு துறை, நெடுஞ்சாலை துறையினருடன் இணைந்து ஆய்வு நடத்தினர்.

தமிழக கேரளா எல்லை போடி மெட்டு மலைச்சாலை வழித்தடத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள கருதப்படும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, போடி தாசில்தார் செந்தில் முருகன், தீயணைப்பு அலுவலர் சக்திவேல் மற்றும் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் முத்துராம் உடன் சென்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad