கடைக்காரர்களுக்கு குட் நியூஸ் - இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி!
வரும் 23ம் தேதி முதல் அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் வரும் 23ம் தேதி முதல் அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் பல தளர்வுகளுடன் 2 வாரங்களுக்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, வரும் 23ம் தேதி முதல் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதே போல், வரும் 23ம் தேதி முதல் அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடை உரிமையாளர்களும், பணியாளர்களும்
கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, கடைகள் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment