ஆன்லைனில் ரூ.10 லட்சம் அனுப்பணுமா? இதுல ஈசியா அனுப்பலாம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 21, 2021

ஆன்லைனில் ரூ.10 லட்சம் அனுப்பணுமா? இதுல ஈசியா அனுப்பலாம்!

ஆன்லைனில் ரூ.10 லட்சம் அனுப்பணுமா? இதுல ஈசியா அனுப்பலாம்!



டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஒரு மாதத்தில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையில் அனுப்பலாம்.2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை இந்தியர்கள் அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். பணம் அனுப்பவும், கட்டணம் செலுத்தவும், ரீசார்ஜ் செய்யவும், ஷாப்பிங் செய்யவும் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் மட்டும் போதும். குறிப்பாக பணம் அனுப்புவதற்காக வங்கிக் கிளையில் மணிக் கணக்கில் காத்துக்கிடக்க வேண்டிய தேவை இல்லை. அதற்காகவே கூகுள் பே, போன் பே போன்ற பல மொபைல் ஆப்கள் வந்துவிட்டன.
இந்த மொபைல் ஆப்களில் பணம் அனுப்புவதற்கும் ரிசர்வ் வங்கி சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, ஒரு மாதத்திற்கு ஒரே முறையாக 10,000 ரூபாய்க்கு மேல் அனுப்ப முடியாது. ஆனால் பேடிஎம் ஆப்பில் ரூ.10 லட்சம் வரையில் உங்களால் அனுப்ப முடியும். அதற்கு முதலில் பெனிஃபிசரி பெயரை சேர்க்க வேண்டும். அதன் பின்னர் நீங்கள் ஒரு மாதத்தில் 10 லட்சம் வரையில் அனுப்பிக் கொள்ளலாம். அதற்கான வழிமுறை இதோ...

பேடிஎம் ஆப் ஓப்பன் செய்து அதில் Send Money to Bank A/C என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்களுடைய புரோஃபைல் கிளிக் செய்து அதில் கீழே இருக்கும் Saved Accounts & Tap on Beneficiary Details என்பதை ஓப்பன் செய்யவும். பிறகு Add New Beneficiary என்பதை கிளிக் செய்து பணம் அனுப்ப வேண்டியவரின் வங்கிக் கணக்கு, IFSC code போன்ற விவரங்களைப் பதிவிட்டு Add Beneficiary பட்டனை கிளிக் செய்யவும். இதன் பின்னர் நீங்கள் பணம் அனுப்பலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad