தமிழகத்தில் திரையரங்குகள், பார்கள் மீண்டும் திறப்பு: தளர்வுகளை வெளியிட்டது அரசு..!
தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் 23-ம் தேதியுடன் முடியவுள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடந்தது. அதன் முடிவாக, ஊரடங்கை செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு நீடிப்பை தொடர்ந்து செப்டம்பர் 1 முதல் 9,10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில்
பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப்.15க்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
அதேபோல, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, 50% பார்வையாளர்களுடன் ஆகஸ்ட் 23 முதல் தியேட்டர்கள் இயங்க அனுமதிக்கப்படும். தியேட்டர் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி, நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இப்பகுதியில் இயங்கும் கடைகளில் வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்த தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்களை (Bar) திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment