செப். 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு - தமிழக அரசு உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 21, 2021

செப். 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு - தமிழக அரசு உத்தரவு!

செப். 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு - தமிழக அரசு உத்தரவு!


தமிழகத்தில், வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதை அடுத்து அமலில் உள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்குவது குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், அரசு உயரதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோருடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதை அடுத்து, தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் பல தளர்வுகளுடன், இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல், பள்ளிகளில், 9, 10, 11, மற்றும் 12ம் வகுப்புகளில் சுழற்சி முறையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகளில் மதிய உணவு திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். மேற்படி உயர் வகுப்பு செயல்படுவதைக் கவனித்து, அதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள், ஒன்று முதல் எட்டு வரை உள்ள வகுப்புகளை, செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

அனைத்து கல்லூரிகளும் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை துறையின் செயலாளர் வழங்குவார். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad