திருப்பூரில் 11 டன் குட்கா பறிமுதல்... 'டாடி' ஸ்டைலில் போலீசாரை பாராட்டிய எஸ்.பி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

திருப்பூரில் 11 டன் குட்கா பறிமுதல்... 'டாடி' ஸ்டைலில் போலீசாரை பாராட்டிய எஸ்.பி

திருப்பூரில் 11 டன் குட்கா பறிமுதல்... 'டாடி' ஸ்டைலில் போலீசாரை பாராட்டிய எஸ்.பி

தமிழகத்தில் குட்கா, பான் விற்பனை பேருக்கு தடை செய்யப்பட்ட பொருட்களாக இருந்தாலும், அதன் விற்பனை பெட்டி கடைகள் முதல் குடோன்கள் வரை பாதிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இது போதாதென்று, வட நாட்டைச் சேர்ந்தவர்கள் சிறு சிறு பீடா கடைகளை அமைத்துக்கொண்டு, அதில் குட்கா, பான், மாவா போன்ற பொருட்களை அமோகமாக விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில்தான், தமிழகத்தில் குட்கா, பான் விற்பனையை இரண்டு மாதங்களில் ஒழிக்க வேண்டும் என்று சுகாதரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கடந்த மாதம் கூறினார்.
அதனை தொடர்ந்து 18 வயதிற்கு குறைவான மாணவர்களுக்கு மற்றும் இளைஞர்களுக்கு பான், புகையிலை விற்பனை செய்தால் பிணையில் வர முடியாத படி வழக்கு பதிவு செய்யப்பட்டு 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் செலுத்தும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.

No comments:

Post a Comment

Post Top Ad