அரசு கட்டிய பாலம் 3 மாதத்தில் உடைந்தது: தர்மபுரியில் பேருந்து போக்குவரத்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 29, 2021

அரசு கட்டிய பாலம் 3 மாதத்தில் உடைந்தது: தர்மபுரியில் பேருந்து போக்குவரத்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது!

அரசு கட்டிய பாலம் 3 மாதத்தில் உடைந்தது: தர்மபுரியில் பேருந்து போக்குவரத்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது!

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் யூனியன், பெரியாம்பட்டியிலிருந்து ஏ சப்பானிப்பட்டி ரோடு வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.
இந்த சூழலில் ஏ.சப்பானிப்பட்டி அருகே ரோட்டின் நடுவே கடந்த, 9 மாதங்களுக்கு முன் சிறிய தரைப்பாலம் கட்டப்பட்டது. கட்டி முடித்த, 3 மாதங்களிலியே அந்த தரைப்பாலம் சேதமடைந்து ரோட்டின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இப்போது தரைப்பாலம் உடைந்து, 6 மாங்களாகிறது. எனினும் பாலத்தை சீர் செய்யாததால் அந்த வழியாக செல்லும் அரசு பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஆம்புலன்ஸ் மற்றும் மினிசரக்கு வாகனங்கள் செல்லாததால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பேருந்து செல்லாததால் பொதுமக்கள் பெரியாம்பட்டிக்கு நடந்தே செல்கின்றனர். இதனால் உடைந்த தரைப்பாலத்தை சீர் செய்து பஸ் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தரம் இல்லாத தரைப்பாலம் அமைத்த கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad