3 நாட்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு: பிரதமர் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

3 நாட்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு: பிரதமர் அறிவிப்பு!

3 நாட்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு: பிரதமர் அறிவிப்பு!

நியூசிலாந்து நாட்டில் ஆறு மாதங்களுக்கு பிறகு ஒரே ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 3 நாட்களுக்கு மீண்டும்
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் ஸ்தம்பித்துள்ளன.

இதை அடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதில் நியூசிலாந்து நாடும் ஒன்று. அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் குறைந்த காலத்திலேயே அங்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது.



ஆறு மாதங்களாக, நியூசிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. இந்நிலையில், அந்நாட்டின் ஆக்லாந்து நகரில், ஆறு மாதங்களுக்கு பிறகு, ஒரே ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதை அடுத்து, அடுத்த 3 நாட்களுக்கு பிறகு நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்படும் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad