ஆப்கானிஸ்தானுக்கு மேம்பாட்டு உதவி நிறுத்தம்: அரசு அதிரடி அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

ஆப்கானிஸ்தானுக்கு மேம்பாட்டு உதவி நிறுத்தம்: அரசு அதிரடி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானுக்கு மேம்பாட்டு உதவி நிறுத்தம்: அரசு அதிரடி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு மேம்பாட்டு உதவிகளை உடனடியாக நிறுத்துவதாக ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதில் இருந்தே தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. 10-க்கும் மேற்பட்ட மாகாணங்களை கைப்பற்றிய தலிபான்கள் நேற்று முன்தினம் தலைநகர் காபூலை தலிபான்கள் சுற்றி வளைத்தனர்.

இதை அடுத்து ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாகவும், இனி தலிபான்கள் ஆட்சி தான் என்றும் தலிபான்கள் அறிவித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இதற்கிடையே, தலிபான்கள் தலைமையிலான அரசுடன் நட்பு ரீதியாக செயல்படத் தயாராக இருப்பதாக சீன அரசு அறிவித்தது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு ஜெர்மனி அரசு சார்பில் அளிக்கப்படும் மேம்பாட்டு உதவிகள் உடனடியாக நிறுத்தப்படுவதாக அந்நாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெர்டு முல்லர் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad