கோணங்கிக்கு கி.ரா விருது: பரிசுத் தொகை 5 லட்சம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 30, 2021

கோணங்கிக்கு கி.ரா விருது: பரிசுத் தொகை 5 லட்சம்!

கோணங்கிக்கு கி.ரா விருது: பரிசுத் தொகை 5 லட்சம்!

கிரா விருது இந்த ஆண்டு எழுத்தாளர் கோணங்கிக்கு வழங்கப்பட உள்ளது.
விஜயா பதிப்பகத்தின் வாசகர் வட்டத்தின் சார்பாக ஒவ்வொரு வருடமும் கி.ரா. விருது வழங்கப்பட்டு வருகிறது. கரிசல் இலக்கியத்தின் தந்தை எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் பெயரில் சிறந்த படைப்பாளாருக்கு கி.ரா. விருதும், மேலும், விருதுடன் ரூ.5 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில்,பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான கி.ரா.விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கி.ரா. விருதை சக்தி மசாலா நிறுவனம் வழங்குகிறது. இந்த விருது செப்டம்பர் 19ஆம் தேதியன்று நடைபெறும் விழாவில் அவருக்கு வழங்கப்படவுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரரான மதுரகவி பாஸ்கர தாஸ் பேரன்தான் எழுத்தாளர் கோணங்கி. இவரது அப்பா சண்முகம், அண்ணன் ச. தமிழ்ச்செல்வன் ஆகியோரும் எழுத்தாளர்கள் ஆவர்.

கோவில்பட்டியில் வசிக்கும் கோணங்கி 1958 ஆம் ஆண்டு நென்மேனி எனும் கிராமத்தில் பிறந்தார். புதுமைப்பித்தன், மௌனி, நகுலன், ந.முத்துச்சாமி, கி.ராஜநாராயணன் போன்ற தமிழ் இலக்கியவாதிகளால் கவரப்பட்ட இவர் கடந்த 1980 ஆண்டு முதல் தனது எழுத்து பயணத்தை துவங்கினார்.


அந்த வகையில் மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண் மக்கள், பொம்மைகள் உடைபடும் நகரம், பாழி, நீர்வளரி, த உள்ளிட்ட படைப்புகள் இவரது பெயர் சொல்லும். இதில் சில நாவல்களும், சில சிறுகதை தொகுப்புகளும் அடங்கும்.

இவருடைய பாழி, பிதிரா, த, நீர்வளரி என்ற நான்கு நாவல்களும் மிக அதிக அளவில் மக்களால் கவரப்படவை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad