செப். 6 முதல் 6 - 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
கர்நாடக மாநிலத்தில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு விகிதம் 2 சதவீதத்திற்கும் கீழ் உள்ள தாலுகாக்களில், வரும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி முதல், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்தியாவில், கொரோனா வைரஸ்
தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இதை அடுத்து ஊரடங்கில் மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளை மாநில அரசுகள் திறந்து வருகின்றன.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில், கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 2 சதவீதத்திற்கும் கீழ் உள்ள தாலுகாக்களில், வரும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி முதல், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என, அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நாகேஷ் அறிவித்துள்ளார்.
மத்திய - மாநில அரசுகள் வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி,
50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படும் என்றும், ஒரு வாரத்தில் ஐந்து நாட்களுக்கு பள்ளிகள் செயல்படும் என்றும், சமூக இடைவெளி, முகக் கவசம் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment