ஆப்கான் வீழ்ந்ததில் அமெரிக்காவின் சூழ்ச்சி: திருமுருகன் காந்தியின் அலசல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

ஆப்கான் வீழ்ந்ததில் அமெரிக்காவின் சூழ்ச்சி: திருமுருகன் காந்தியின் அலசல்

ஆப்கான் வீழ்ந்ததில் அமெரிக்காவின் சூழ்ச்சி: திருமுருகன் காந்தியின் அலசல்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதை அடுத்து தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் ஆப்கானின் புதிய அதிபராக பதவி ஏற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், தலிபான்களுக்கு எதிராக 20 ஆண்டுகள் ஆப்கான் படைக்கு பயிற்சி கொடுத்து வந்த அமெரிக்கா தமது நாட்டு படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்துவிட்டது.
மேலும், இன்னொரு நாட்டு பிரச்சினைக்கான இனியும் எங்களது வீரர்களின் உயிரை இழக்க விரும்பவில்லை என கூறி நீண்டகால போரை முடிவுக்கு கொண்டு வருகிறோம் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவிற்கு வலதுசாரி தாலிபன்களிடம் ஆப்கானிஸ்தானை ஒப்படைப்பதில் எவ்வித பிரச்சனையும் கிடையாது என்று மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

அது தொடர்பாக ட்விட்டரில் அவர் கூறியுள்ளது;

''அமெரிக்கா வியத்நாமில் கம்யூனிஸ்டுகளிடம் பட்ட தோல்வியை போலல்ல ஆப்கான் தோல்வி. தாலிபன்கள் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு சாதகமாக நிற்பார்கள் என்பதை விட, அமெரிக்காவிற்கு எதிரான ஈரான், சீனா ரசியாவிற்கு எதிரிகளாக்கி விட முடியும் எனும் நம்பிக்கை இதன் பின்னால் உண்டு. 20 ஆண்டுகளாக மேற்குலகம் உருவாக்கிய ஆப்கன் ராணுவம் சீட்டுகட்டைப்போல சரிந்ததும், அதிபர் நாட்டைவிட்டு ஓடியதும் எதேச்சையானதல்ல. மதவாத மோடிக்கும், மதவாத தலிபானுக்கும் ஆதரவளிப்பது அமெரிக்காவிற்கு புதிதல்ல.

ஆப்கானில் இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை தாலிபன்கள் தொல்லைபடுத்தியதில்லை. தாலிபன்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களல்ல. மத்திய ஆசியாவிற்கு செல்லும் எண்ணை குழாய்களை கட்டுப்படுத்த ஆப்கான் தேவை. ஒருபுறம் சீனாவின் உய்குர் பிரச்சனையை பெரிதாக்கவும், மறுபுறம் ஈரானுக்கு சிக்கலை கொடுக்கவும் தாலிபன்கள் தேவை.

இப்பிராந்தியத்தில் மதத்தீவிரவாதத்தை நிலைநிறுத்தினால் மட்டுமே மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் மூலதனங்கள் பாதுகாக்கப்படும். ஈரானையும், சீனாவையும் பிராந்திய அளவில் தொடர் சிக்கலில் நிலைநிறுத்தி தனது ஆதிக்கத்தை இந்தியக்கடல், தென்சீனக்கடலில் தீவிரப்படுத்த இதுவே உகந்த வழியாக ஏகாதிபத்தியம் எடை போட்டது. சவுதி, பாகிஸ்தான் என தனது எடுபிடிகளுக்கு துணையாக தாலிபன்களை அமெரிக்கா வளர்த்துவிடும்.



பெண்களின் உரிமைகள், சிறுபான்மை உரிமைகளை பழமைவாத பயங்கரவாதத்தினால் சீரழிக்கும் தாலிபன் ஆட்சி மிக ஆபத்தானது. மதவாதிகளால் ஏகாதிபத்தியத்தை எதிர்கொள்ள இயலாது என்பதை மத்திய ஆசியாவின் 40 ஆண்டுகால வரலாறு சொல்லுகிறது. தாலிபன் ஆட்சியும், இதற்கு முந்தைய மேற்குலக பொம்மை ஆட்சியும் ஆப்கானிய மக்களுக்கானதல்ல. இந்த மதவெறி கும்பலை வீழ்த்தி சனநாயக முற்போக்கு ஆட்சியை அமைக்கும் பொறுப்பு ஆப்கானிய மக்களிடமே உண்டு'' என இவ்வாறு கூறியுள்ளார். முன்னதாக தலிபான்களுக்கு ஆதரவாக சீனாவும், ரஷியாவும் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad