இன்னும் ஒரே வருடத்தில் இந்தியாவை தாலிபான், சீனா மற்றும் பாகிஸ்தான் தாக்கும் - சு.,சுவாமி பகீர் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

இன்னும் ஒரே வருடத்தில் இந்தியாவை தாலிபான், சீனா மற்றும் பாகிஸ்தான் தாக்கும் - சு.,சுவாமி பகீர்

இன்னும் ஒரே வருடத்தில் இந்தியாவை தாலிபான், சீனா மற்றும் பாகிஸ்தான் தாக்கும் - சு.,சுவாமி பகீர்

ஆப்கானின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வந்த தலிபான்கள் முக்கிய நகரமான காபூல் பகுதியை சண்டையிடாமல் கைப்பற்றிய நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி நாட்டிலிருந்து வெளியேறி தஜிகிஸ்தான் நாட்டுக்கு சென்றுவிட்டார். ஆனால், அஷ்ரப் கானிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது ஓமன் நாட்டில் உள்ள அவர் அமெரிக்காவுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளார்.
ஆப்கானை தலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றிய நிலையில் விரைவில் அங்கு தலிபான்கள் ஆட்சியமையவுள்ளது. இதனால் கடுமையான விதிகளை தலிபான்கள் நடைமுறைக்கு கொண்டு வரலாம் என்று ஆப்கான் மக்கள் பலரும் நாட்டிலிருந்து வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். முன்னதாக காபூல் விமான நிலையத்தில் புகுந்த ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்கள் மூலம் தப்பிக்க முயற்சித்தனர்.

அப்போது விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தின் சக்கர பகுதியில் ஏறிச்சென்ற இருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றியதுடன் விரைவில் அங்கு தலிபான்கள் அமைப்பைச் சேர்ந்த முல்லா பரடா என்பவர் அதிபராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



மேலும், தலிபான்கள் ஆட்சிக்கு சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. முன்னதாகதாலிபான்களின் நடத்தையின் அடிப்படையில் புதிய அரசாங்கத்தை அங்கீகரிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று ரஷ்ய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து, தாலிபான்கள் அடிமைத்தனத்தின் பிணைப்பை உடைத்துவிட்டனர் என்று பாகிஸ்தான் அரசும், ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டை புனரமைத்து, எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானை அமைதியான, நிலையான, வளமான தெற்காசிய நாடாக நாங்கள் பார்க்க விரும்புகிறோம் என்று பங்களாதேஷ் அரசும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதுபோல, தலிபான்களுடன் நட்புரீதியான உறவை வளர்க்க தயாராக இருக்கிறோம் என்று சீனா தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இன்னும் ஒரு வருடத்திற்குப் பிறகு தாலிபான், சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியோர் இந்தியாவைத் தாக்குவார்கள் என்று இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பாக ட்வீட் செய்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad