முதல்வர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு - தலைநகரில் ஊரடங்கு அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

முதல்வர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு - தலைநகரில் ஊரடங்கு அறிவிப்பு!

முதல்வர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு - தலைநகரில் ஊரடங்கு அறிவிப்பு!


மேகாலயா மாநில முதலமைச்சர் கன்ராட் சங்கா வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. தலைநகர் ஷில்லாங்கில் பதற்றம் நீடித்து வருவதால், ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில், அடுத்தடுத்து வெடிகுண்டு நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முன்னாள் பயங்கரவாதியான செரிஸ் டர்பீல்ட ு தாங்கியூ என்பவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அம்மாநிலத்தில் கலவரம் வெடித்துள்ளது.

குறிப்பாக தலைநகர் ஷில்லாங்கில் பயங்கர வன்முறை வெடித்தது. தலைநகரை ஒட்டியுள்ள 4 மாவட்டங்களில் ஊரடங்கும் அமல்படுத்தும் நிலைக்கு சென்றுள்ளது. இதற்கிடையே, மேகாலயா மாநில முதலமைச்சர் கன்ராட் சங்கா வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகள ை வீசி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
ஷில்லாங்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதோடு, இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
வன்முறை சம்பவங்களை முன்வைத்து அம்மாநில உள்துறை அமைச்சர் லக்மென் ரிம்புய் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad