முதல்வர் ஸ்டாலின் கேட்ட கேள்வி: அதிமுக முன்னாள் அமைச்சர் கப்சிப்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 16, 2021

முதல்வர் ஸ்டாலின் கேட்ட கேள்வி: அதிமுக முன்னாள் அமைச்சர் கப்சிப்!

முதல்வர் ஸ்டாலின் கேட்ட கேள்வி: அதிமுக முன்னாள் அமைச்சர் கப்சிப்!

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று 100 நாட்களைக் கடந்துவிட்டது. பதவியேற்றது முதலே கொரோனா பணிகளில் அவர் கவனம் செலுத்திய விதம், மக்கள் நலத் திட்டங்கள் என ஸ்டாலின் அரசு மக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

அதேசமயம், தேர்தல் சமயத்தில் திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று அதிமுகவினர் தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, அதன் மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது.

அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை தாமதப்படுத்தவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நிதி பிரச்ச்சினை எவ்வாறு கையாளப்பட்டது என்பன உள்ளிட்ட தமிழக அரசின் நிதிநிலையை வெள்ளை அறிக்கையாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட நிலையில், இந்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “கடந்த 2016 தேர்தலில் கூறப்பட்ட அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பினார். அத்துடன், மோனோ ரயில் திட்டம், ஆவின் பால் பாக்கெட் விலை 25 ரூபாய், செல்போன் வழங்குதல் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை என்று சுட்டிக்காட்டிய முதல்வர் ஸ்டாலின், “திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் சொன்னதையும் செய்து வருகிறது, சொல்லாததையும் செய்து வருகிறது. 14 வகை மளிகைப் பொருள்கள் தொகுப்பு தேர்தல் வாக்குறுதியில் சொல்லாதது” என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad