தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்மேற்கு பருவ காற்று காரணமாக இன்று ஆகஸ்ட் 31ஆம் தேதி தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


செப்டம்பர் 1ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள்,


புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக செப்டம்பர் 2ஆம் தேதி கடலூர், சேலம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

செப்டம்பர் 3ஆம் தேதி ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.



செப்டம்பர் 4ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாபலிபுரம் (செங்கல்பட்டு) 3, காஞ்சிபுரம், வால்பாறை (கோவை), பூண்டி (திருவள்ளூர்), சோலையாறு (கோவை), பொள்ளாச்சி (கோவை) தலா 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad