பள்ளிகள் திறப்பு: தயக்கம் காட்டும் தனியார் பள்ளிகள்!
கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்வி நிலையங்கள் தற்போது நாடு முழுவதும் திறக்கப்பட்டு வருகின்றன.
பாதிப்பு குறைவதால் மக்கள் மத்தியில் நம்பிக்கை பிறந்துள்ளது.
தமிழ்நாட்டில் செப்டம்பார் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. ஆந்திரா,
கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது.
கர்நாடகாவில் திங்கள் கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
வகுப்பறைகள் துாய்மைப்படுத்தப்பட்டு, பள்ளி நிர்வாக பணியாளர்கள், அலுவலர்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதும் உறுதிசெய்யப்பட்டது.
இந்த சூழலில் சில தனியார் பள்ளிகள் கொரோனா அச்சம் காரணமாக நேரடி வகுப்புகளை தொடங்க தயக்கம் காட்டுகின்றன. இதனால் ஆன்லைன் வகுப்புகளையே தொடர உள்ளதாக தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment