புதிய நகராட்சிகள், மாநகராட்சிகள்: இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு?
திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் நிதிநிலை சீராக இல்லாத நிலையில் பல திட்டங்களை நிறைவேற்ற முடியாத சூழல் நிலவுகிறது.
கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி, பெண்களுக்கான உரிமைத் தொகை ஆகியவை தொடர்பான அறிவிப்புகள
ை மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். இது ஒருபுறமிருக்க புதிய நகராட்சிகள், மாநகராட்சிகள் ஏற்படுத்தப்படும் என்றும், மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அண்மையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவும் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
சட்டப்பேரவையில் நேற்று நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு பிறகு பேசிய அத்துறை அமைச்சர் துரைமுருகன்
, தனது துறை சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடைபெற உள்ளது. நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் அத்துறை அமைச்சர் கே.என் நேரு, அறிவிப்புகளை வெளியிட உள்ளார். அப்போது புதிய நகராட்சிகள், புதிய மாநகராட்சிகள், புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அமைச்சர் பெரிய கருப்பணும் விவாதத்தில் பங்கேற்க உள்ளார்.
No comments:
Post a Comment