மீண்டும் அமலாகிறது இரவு நேர ஊரடங்கு: மாநில அரசு அதிரடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 28, 2021

மீண்டும் அமலாகிறது இரவு நேர ஊரடங்கு: மாநில அரசு அதிரடி!

மீண்டும் அமலாகிறது இரவு நேர ஊரடங்கு: மாநில அரசு அதிரடி!

கேரள மாநிலத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, வரும் திங்கட்கிழமை முதல், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் பல்வேறு மாநிலங்களில் குறைந்து வருகிறது. ஆனால் கேரள மாநிலத்தில் மட்டும் தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. கொரோனா முதல் அலையை மிகச் சிறப்பாக கையாண்ட கேரள மாநில அரசு, தற்போது இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடி வருகிறது.

நாட்டில் பதிவாகும் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்புகளில், சுமார் 60 சதவீதம் கேரள மாநிலத்திலிருந்து தான் பதிவாகி வருகின்றன. ஓணம் பண்டிகையையொட்டி, ஊரடங்கில் கட்டுப்பாடுகளை கேரள மாநில அரசு தளர்த்தியது. இதன் காரணமாக, 17 ஆயிரமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, தற்போது, 30 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா பாசிட்டிவ் விகிதமும், 20 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. இதை அடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஐந்து அடுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என, அம்மாநில அரசுக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில் இன்று, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, வரும் திங்கட்கிழமை முதல், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்படும் என, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, கேரள மாநிலத்தில், கடந்த 24 மணி நேரத்தில், 31 ஆயிரத்து 265 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad