"என்னை ராஜினாமா செய்ய சொல்ல அவரு யாரு?" - முதலமைச்சர் காட்டம்!
விவசாயிகளை போராட தூண்டி விடுவதே காங்கிரஸ் தலைவர்கள் தான் என, ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் குற்றம் சாட்டி உள்ளார்.
ஹரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் பா.ஜ.க.,வைச் சேர்ந்த முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில்
ஈடுபட்டவர்கள் மீது ஹரியானா காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் சிலர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். விவசாயிகள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டதற்காக ஹரியானா முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பஞ்சாப் மாநிலத்தில் அமரீந்தர் சிங் தான் விவசாயிகளை போராட தூண்ட
ி விடுகிறார். ஹரியானாவில் பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் விவசாயிகளை தூண்டி விடுகிறார்கள். சாலைகளை நீண்ட காலம் மறிப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.
என்னை ராஜினாமா செய்ய சொல்வதற்கு அமரீந்தர் சிங் யார்? உண்மையில் டெல்லி எல்லையில் விவசாயிகளை போராட தூண்டிவிடும் அவர் தான் முதல்வர் பதவிய
ை ராஜினாமா செய்ய வேண்டும். ஹரியானா விவசாயிகள் யாரும் சிங்கு , திக்ரி எல்லைகளில் போராடவில்லை.
No comments:
Post a Comment