புளியந்தோப்பு அடுக்குமாடி: ஆய்வு செய்த திருமாவளவன் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 23, 2021

புளியந்தோப்பு அடுக்குமாடி: ஆய்வு செய்த திருமாவளவன்

புளியந்தோப்பு அடுக்குமாடி: ஆய்வு செய்த திருமாவளவன்

புளியந்தோப்பு குடியிருப்பு பகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்த அவர் அதிகாரிகளை சந்தித்து நிலையை தெரிந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன், "புளியந்தோப்பு கேபி பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் தரத்தோடு இல்லை ஆபத்தான நிலையில் உள்ளது என்ற செய்தி கடந்த இரண்டு வாரங்களாக வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து சட்டமன்றத்திலும் பேசப்பட்டு இருக்கிறது

தமிழக அரசு ஐஐடி வல்லுனர்கள் குழுவை அமைத்து கட்டிடத் தன்மையை ஆய்வு செய்ய அறிவித்திருக்கிறது. இந்நிலையில் இப்பகுதி மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தோம்

இந்த அடுக்குமாடி கட்டிடம் உறுதியாக தரத்தோடு கட்டப்படவில்லை என மக்கள் புகார் தெரிவித்தனர். நாங்களும் ஆய்வு செய்தோம். சில இடங்களில் உடைந்துள்ளது.


ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு 1.5 லட்சம் கட்ட வேண்டும் என அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது. அன்றாடக் கூலி வேலைக்கு செல்லும் மக்களால் ஒன்னரை லட்சம் கட்ட முடியாது என மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று ஒன்றரை இலட்சம் செலவை அரசே ஏற்றுக் கொள்ள வலியுறுத்துவோம். குடிநீர் வசதியும் இல்லை மின்தூக்கியும் இயங்கவில்லை.கட்டிடத்திற்கு எம்சாண்ட் பயன்படுத்தியது தான் இதற்கு காரணம் என்றும் அதனை சீர் அமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம் என்றும் கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையை எந்த பாதிப்பும் இருக்காது எனவும் செயற்பொறியாளர் உறுதியளித்துள்ளார். 4 நாட்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி மற்றும் மின்தூக்கி வசதியை சரி செய்து விடுவோம் என தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

Post Top Ad