கொடநாடு வழக்கில் சிக்கும் முக்கியப் புள்ளிகள் யார்? மர்ம பின்னணி!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
இ
முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். கொடநாடு எஸ்டேட்டில் என்ன நடந்தது என்பது விலகாத மர்மமாகவே இன்னும் உள்ளது.
இந்த மர்ம மரணங்களுக்குப் பின்னணியில் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமூவேலிடம் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், மனோஜ் ஆகியோர் வாக்குமூலம் அளித்திருந்தார். இதனால், கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ஆட்சி மாற்றம்
ஏற்பட்டதும் இந்த விவகாரம் மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் தேதி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை முதலில் இருந்தே விசாரிக்க வேண்டும் என அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றமும் அதற்கு அனுமதியளிக்க சயனிடம் காவல்துறையினர் சில தினங்களுக்கு முன்னர் ரகசிய விசாரணை நடத்தினர்.
No comments:
Post a Comment