இரண்டாம் கட்ட வெளிவட்ட சாலை: எ.வ.வேலு சொன்ன கணக்கு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 27, 2021

இரண்டாம் கட்ட வெளிவட்ட சாலை: எ.வ.வேலு சொன்ன கணக்கு!

இரண்டாம் கட்ட வெளிவட்ட சாலை: எ.வ.வேலு சொன்ன கணக்கு!

அதிமுக ஆட்சியில் சென்னை கூடுவாஞ்சேரி- மீஞ்சூர் வெளிவட்ட சாலை அமைப்பதில் 1886.40கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டசபையில் பேசினார்.
கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது 132 கி.மீ.அளவிற்கு இரண்டு வெளிவட்ட சாலைகள் தொடங்கப்பட்டன என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.


சட்ட சபையில் இன்று பேசிய பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “திமுக ஆட்சியில் இருந்தபோது சென்னை ஒட்டியுள்ள கூடுவாஞ்சேரி- மீஞ்சூர் முதல்கட்ட வெளிவட்ட சாலை தொடங்கப்பட்டது.

அது ஜி.எம்.ஆர் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் முடிவடைந்து. அப்போது திமுக ஆட்சி காலத்தில் அந்நிறுவனத்துடன் 6 மாதத்திற்கு 63.13 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டாம் கட்ட வெளிவட்ட சாலை பணிகள் நடைபெற்றது. அதில் புதிய ஒப்பந்ததாரருடன் கையெழுத்து போடப்பட்டது. 6 மாதங்களுக்கு 119.7 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது .

இதன் மூலம் தமிழக அரசுக்கு இரண்டம் கட்ட வெளிவட்ட சாலை அமைப்பதில் 1886.40 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆறு வருடங்களில் விலைவாசி ஏறி உள்ளது என்றாலும் அரசுக்கு 1600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad