ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: புதிய தளர்வுகள் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 21, 2021

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: புதிய தளர்வுகள் அறிவிப்பு!

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: புதிய தளர்வுகள் அறிவிப்பு!

கொரோனா இரண்டாவது அலை கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் தீவிரமடைந்தது. இரண்டாவது அலையாக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஆந்திராவும் ஒன்றாக இருந்தது. இதையடுத்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அமல்படுத்தியது.

தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதையடுத்து, கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தன. ஆனால், கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊடங்கு மட்டும் அங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இரவு நேர ஊரடங்கு வருகிற செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

அதன்படி தினமும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமணம், மத ஊர்வலங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் 150 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் ஆணையர்கள் உறுதி செய்யவேண்டும் எனவும் அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று மட்டும் ஆந்திராவில் புதிதாக 1,501 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், 10 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad